Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மார்ச் 29 , பி.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
ஊரடங்கு நாளைய தினம் (30) தளர்த்தப்படும்போது, மட்டக்களப்பு மாநகர சபையின் கீழ் உள்ள பொதுச் சந்தைகளை திறக்காமல் மூடுவதற்கான தீர்மானம், மட்டக்களப்பு மாநகர சபையில் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் கொரோனா தொற்று அச்சுறுத்தல்கள் காரணமாக தொடர்ச்சியான ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுவரும் நிலையில், மட்டக்களப்பு மாநகர சபையின் அமர்வு, விசேட அமர்வாக இன்று (29) காலை மாநகர சபை மேயர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவதுடன், முன்னெடுக்கப்படும் ஊரடசங்கின்போது மாநகர சபையால் மக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், தொடர்ச்சியான ஊரடங்கு காரணமாக மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அன்றாடம் கூலித்தொழில்செய்து இன்று தொழில்பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மாநகர சபை ஊடாக ஒரு தொகை நிதி வழங்குவதற்கும் சபையால் அங்கிகாரம் வழங்கப்பட்டது.
இதனடிப்படையில், மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட அனைத்து வட்டாரங்களிலும் உள்ள 3,000 குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு முதல் கட்டமாக இரண்டு மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதுடன், மாநகர சபையின் நடவடிக்கைகளுக்கு உதவி வழங்கும் அமைப்புகளின் உதவியையும் பெற்று இதனை முன்னெடுப்பது எனவும் மேயரால் இங்கு தெரிவிக்கப்பட்டது.
அதேளை, உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் இயங்கும் பொதுச்சந்தைகளை மூட நடவடிக்கையெடுக்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில், நாளைய தினம் பொதுச் சந்தையைத் திறப்பதில்லையென்ற தீர்மானமும் இன்றைய அமர்வின்போது எடுக்கப்பட்டது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
40 minute ago
45 minute ago
1 hours ago