Princiya Dixci / 2016 நவம்பர் 30 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஏறாவூர் இரட்டைக் கொலை சந்தேகநபர்கள் அறுவரதும் விளக்கமறியல், எதிர்வரும் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர், முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைச்சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 6 சந்தேகநபர்களும், இன்று புதன்கிழமை (30), ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
இந்த இரட்டைக் கொலை சம்பவத்தில் நூர்முஹம்மது உஸைரா (வயது 56) எனும் தாய் மற்றும் அவரது மகளான ஜெனீரா பானு (வயது 32) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த இரட்டைக் கொலை சம்பவத்தில் கொல்லப்பட்ட பெண்ணின் கணவனுடைய சகோதரன் உட்பட ஆறு பேருக்கான விளக்கமறியலே நீடிக்கப்பட்டுள்ளது.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025