Janu / 2024 ஏப்ரல் 30 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து ஐஸ் போதை பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை (30) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது .
மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கமையவே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதன்போது , மோட்டார் சைக்கிள் ஒன்றில் கீழ்ப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 14, 570 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது .
இதன்போது கைது செய்யப்பட்ட நபர்கள் காத்தான்குடி மையவாடி வீதி மற்றும் காத்தான்குடி ஆறாம் குறிச்சி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் அதில் ஒருவர் பிரபல மென் பானம் ஒன்றின் முகவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் , குறித்த சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
ரீ. எல் ஜவ்பர்கான்



11 minute ago
27 minute ago
30 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
27 minute ago
30 minute ago
50 minute ago