Princiya Dixci / 2021 பெப்ரவரி 14 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடியிலிருந்து கொழும்பு, கட்டுநாயக்கா, கண்டி, பதுளை, பாணந்துறை, திருகோணமலை, நுவரெலியா ஆகிய தூர இடங்களுக்கு மீன்டும் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக காத்தான்குடி பிரதேசத்தில் கடந்த 40 நாட்களாக அமுலிலிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டதன் பின்னர், இலங்கை போக்குவரத்து சபையால் தூர இடங்களுக்கு சேவைகளில் ஈடுபடும் பஸ் சேவைகள் வழமைபோல் ஆரம்பித்துள்ளன.
தினமும் தூர இடங்களுக்கு சேவையில் ஈடுபடும் பஸ்களில் ஆசனப் பதிவு உள்ளிட்ட ஏனைய விடயங்களுக்கு 0652247046 என்ற இலங்கை போக்குவரத்து சபையின் காத்தான்குடி பஸ் டிப்போ தொலைபேசி இலக்கத்துக்குத் தொடர்புகொண்டு அது தொடர்பான சேவைகளை பெற்றுக் கொள்ள முடியுமென, இலங்கை போக்குவரத்து சபையின் காத்தான்குடி பஸ் டிப்போ அலுவலகம் தெரிவித்துள்ளது.
34 minute ago
38 minute ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
38 minute ago
05 Mar 2026