2025 மே 06, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடியில் 71 பேர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 03 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

காத்தான்குடி பொலிஸ் பிரிவில், ஊரடங்குச் சட்டத்தை மீறிய 71 பேர் கைது செய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட நபர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஊரடங்குச் சட்டம் காரணமாக முழு மட்டக்களப்பு மாவட்டமும் தொடர்ந்தும் வெறிச்சோடிக் காணப்படுவதுடன், பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X