Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
கனகராசா சரவணன் / 2019 ஏப்ரல் 09 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயங்கேணி பிரதேசத்தில் கைக்குண்டு, வாள்களுடன் இளைஞர்கள் இருவரை, நேற்று (08) மாலை கைதுசெய்துள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலையடுத்து, அப்பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ். சமந்த தலைமையிலான குழுவினர், ஐயங்கேணி பிரதேசத்தில் வைத்து, கைக்குண்டு ஒன்று, 04 வாள்களைக் கைப்பற்றியதுடன், அவற்றை வைத்திருந்த இரு இளைஞர்களைக் கைது செய்து, ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில், ஐயங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞரிடமிருந்து ஒரு கைக்குண்டும், வாள் ஒன்றும், இரும்புக் கம்பிகள் சிலவும் கைப்பற்றப்பட்டதுடன், பாரதிபுரத்தைச் சோந்த 22 வயது இளைஞரிடமிருந்து 3 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
9 minute ago
27 minute ago
1 hours ago