Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
கிழக்கு மாகாணத்தில் உள்ள விழிப்புலனற்றவர்களின் நன்மை கருதி கொடிவாரம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு உதயம் வழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த கொடி வாரம் இன்று தொடக்கம் எதிர்வரும் மே முதலாம் திகதி வரையில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வாக, இன்று பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு எம்.உதயகுமாருக்கு முதல் கொடி அணிவிக்கப்பட்டு கொடிவாரம் ஆரம்பிக்கப்பட்டது.
இது தொடர்பான நிகழ்வு மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர் எம்.ஜதீஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எம்.உதயகுமார், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் அருள்மொழி, மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஆலோசகர் து.லக்ஸ்மிகாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன் உட்பட பலருக்கு அணிவிக்கப்பட்டது.
இதன்மூலம் திரட்டப்படும் நிதி விழிப்புலனற்றவர்களின் தொழில் முயற்சிக்காக பயன்படுத்தப்படவுள்ளதாகவும் இதற்கு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறும், மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர் எம்.ஜதீஸ் தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு சமாந்தரமாக இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago