Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்
2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 26,574 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர் என க.பொ.த. சாஃத ல்விப் பரீட்சைக்கான மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே.பாஸ்கரன் தெரிவித்தார்.
இம்மாவட்டத்தில் 186 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறுவதுடன், 14 இணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
புதிய பாடத்திட்டத்துக்கு அமைய பாடசாலை ரீதியாக 8,536 மாணவர்களும் 2,359 பிரத்தியேக பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். இதேவேளை, பழைய பாடத்திட்டத்துக்கு அமைய பாடசாலை ரீதியாக 1,507 மாணவர்களும் 14,172 பிரத்தியேக பரீட்சார்த்திகளும் தோற்றுகின்றனர் எனவும் அவர் கூறினார்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025