Janu / 2025 மே 25 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, நகரில் சட்டத்தரணிகள் சிலர் பகல் உணவுக்காக பிரபல உணவகம் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்த உணவில் புழுக்கள் காணப்பட்டதையடுத்து அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைபாடுக்கமைய பொதுச்சுகாதார பரிசோதனைகள் குறித்த வர்த்தக நிலையத்தை சுற்றி வளைத்தனர்
இதன்போது மனித பாவனைக்கு உதவாத, பழுதடைந்த, காலாவதியான சமைத்த பெருமளவிலான உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு புளியந்தீவு பதில் பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன் ராஜ் தெரிவித்தார்
குறித்த உணவு பொதிகளை பிரித்து சாப்பிட முற்பட்ட போது அதற்குள் இருந்து புழுக்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் சுகாதார அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட உணவுப் பொருட்களும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளன.
ரீ.எல்.ஜவ்பர்கான், கனகராசா சரவணன்


9 minute ago
10 minute ago
20 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
10 minute ago
20 minute ago
42 minute ago