Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 ஜனவரி 17 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எச்.எம்.எம்.பர்ஸான், ஆர்.ஜெயஸ்ரீராம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடையில் நேற்று (16) பிற்பகல் சிறுவன் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்களான 4 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டதோடு, கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கத்தியையும் ஓட்டோவையும் கைப்பற்றியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மீராவோடை கிராமத்தைச் சேர்ந்த சனூஸ் முஹம்மத் ஸக்கீர் (வயது 16) எனும் சிறுவனே கொல்லப்பட்டுள்ளார்.
இளைஞர் குழுவுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் கூரிய கத்தியால் குத்தப்பட்டதில் மேற்படி சிறுவன் பலியாகியுள்ளார்.
படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் தோய்ந்து கிடந்த இளைஞனை, சந்தேகநபர்களே தாங்கள் பயணம் செய்த ஓட்டோவில் ஏற்றிச் சென்று, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கிடத்தி விட்டுத் தலைமறைவாகியிருந்துள்ளனர்.
இந்நிலையில் தேடுதலின்போது நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனரெனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சகோரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
24 minute ago
26 minute ago