2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Editorial   / 2018 ஏப்ரல் 22 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன் , ஹஸ்பர் ஏ ஹலீம்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட, சுமார் 2 மில்லியன் ரூபாய் பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் காத்தான்குடியிலுள்ள சுய முயற்சியாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், வெள்ளிக்கிழமை ​நேற்றமுன்தினம் (20) இடம்பெற்ற இந்நிகழ்வில், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

பிரதேச செயலாளர் யூ. உதயசிறீதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், காத்தான்குடி நகர சபையின் தலைவர் எஸ்.எச்.எம். அஸ்பர் மற்றும் நகர சபை உறுப்பினர்களும், அதிகாரிகளும் மற்றும் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X