2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சாரணர் ஜம்போறியில் 400 பேர் பங்குபற்றவுள்ளனர்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

இலங்கையின் ஒன்பதாவது தேசிய சாரணர் ஜம்போறி கில்வெல் ஒன்றுகூடல் எதிர்வரும் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 360  சாரணர்களும் 40 சாரண ஆசிரியர்களும்  கலந்துகொள்ளவுள்ளனர்.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டச்  சாரணர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வு, மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் இன்று திங்கட்கிழமை மாவட்டச் சாரணர் ஆணையாளர் இ.பி.ஆனந்தராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்த ஜம்போறியின்போது சாரணர்களின் செயற்பாடுகள் தொடர்பில் தெளிவூட்டப்பட்டதுடன்,  இதில் கலந்துகொள்ளும் சாரணர்களுக்கு சின்னங்களும் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X