2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

டெங்குத் தொற்று காரணமாக உயர்தர வகுப்பு மாணவி உயிரிழப்பு

Editorial   / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியைச்  சேர்ந்தவரும் வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலையின் மாணவியுமான செல்வி சபாநாதன் ஜதுர்ஸ்ரிக்கா, டெங்குத் தொற்றால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (30) உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு டெங்குத் தொற்று காரணமாக உயிரிழந்த மாணவி,  பொதுச் சுகாதார பரிசோதகர் சபாநாதனின் மகள் ஆவார்.

கடந்த 27ஆம் திகதி முதல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விடுதி 1இல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஜதுர்ஸ்ரிக்கா (வயது 17), சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X