Suganthini Ratnam / 2016 நவம்பர் 17 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் வாவியில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மீனவர்கள் 06 பேரை இன்று வியாழக்கிழமை காலை கைதுசெய்துள்ளதாகக் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் த.பாலமுகுந்தன் தெரிவித்தார்
குறித்த வாவியில்; தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கை இடம்பெறுவதாக தமக்குத் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, அங்கு சென்று சோதனை மேற்கொண்டபோது, குறித்த மீனவர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டமை தெரியவந்தது.
இந்நிலையில், குறித்த மீனவர்களைக் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான தடைசெய்யப்பட்ட வலைகளையும் சுமார் 50 கிலோ மீன்களையும்; கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.
4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025