Freelancer / 2023 செப்டெம்பர் 11 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதியோர் இல்ல வீதியில் இன்று(11) மதியம் பாரியளவில் பரவிய தீ மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.


வெற்று காணி ஒன்றில் குப்பைகளை எரித்துக் கொண்டிருந்த போதும் திடீரென ஏற்பட்ட கடுமையான சுழல் காற்று காரணமாக குறித்த குப்பைகளில் பரவிய தீ அருகில் இருந்த ஏனைய வளவுகளுக்குள்ளும் பரவி பாரியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுமார் பத்துக்கும் மேற்பட்ட காணிகள் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன் பல பனை மரங்களும் தென்னை மரங்களும் எரிந்து நாசமாக உள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,.
மட்டக்களப்பு மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு பிரிவினர் ஸ்தலத்திற்கு உடனடியாக விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ரீ.எல். ஜவ்பர்கான்



1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago