Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 16 , பி.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பல்லேகலவில் தற்போது நடைபெற்று வரும் அவுஸ்திரேலியாவுக்கெதிரான குழு பி போட்டியில் இலங்கை முதலில் களத்தடுப்பிலீடுபடுகிறது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் தசுன் ஷானக, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.
இலங்கையணியில் கடந்த போட்டியில் விளையாடிய கமில் மிஷாரவை குசல் பெரேரா பிரதியிட்டிருந்தார்.
அவுஸ்திரேலிய அணியில் கடந்த போட்டியில் விளையாடிய மற் றென்ஷோ, மத்தியூ கூனுமென், பென் டுவார்ஷுஸை அணித்தலைவர் மிற்செல் மாஷ், கூப்பர் கொனோலி, ஸ்கேவியர் பார்ட்லெட் ஆகியோர் பிரதியிட்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .