வா.கிருஸ்ணா / 2018 ஏப்ரல் 08 , பி.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக்குளத்திலிருந்து, இன்று (08) காலை துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக்குளத்தை புனரமைக்கும் பணிகள், தற்போது நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையிலேயே, இந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. ந்திய அமைதிகாக்கும் படை காலத்தில் பயன்படுத்தப்பட்ட எஸ்.எம்.ஜி.ரக துப்பாக்கியே, இவ்வாறு குளத்தின் புனரமைப்பு பணியின் போது மீட்கப்பட்டதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மீட்கப்பட்ட துப்பாக்கி, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago