2026 பெப்ரவரி 11, புதன்கிழமை

நீருக்குள் கசிப்பு ; மூவர் கைது

Janu   / 2026 பெப்ரவரி 10 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை களப்பு  பகுதியை அண்டிய வாவியில் மறைத்து வைக்கப்பட்ட கோடா மற்றும் கசிப்புடன்  மூன்று சந்தேக நபர்களை  மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை கைது செய்துள்ளனர். 

 மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய திங்கட்கிழமை (09)  மாலை ஆறு மணி முதல் செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை ஆறு மணி வரை  மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது  ஆரையம்பதியில் இருவர் மற்றும் மாவிலங்க துறையை சேர்ந்த ஒருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  14 இலட்சம் மில்லி லீட்டர்  கோடா மற்றும் 50 ஆயிரம் மில்லி லீட்டர் கசிப்பு , கோடா பரல்கள்,  கசிப்பு வடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கலன்கள் ஆகிய மீட்கப்பட்டுள்ளது. 

கைதான சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள்  காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில்  ஒப்படைக்கப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 ரீ.எல்.ஜவ்பர்கான்  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .