2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நெல்லூரில் சிறுமியின் சடலம் மீட்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயித்தியமலை, பொலிஸ் பிரிவிலுள்ள நெல்லூர், கிராம வீடொன்றிலிருந்து சிறுமியொருவரின் சடலம்  இன்று (05) மீட்கப்பட்டுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.

நெல்லூர், பாடசாலை வீதியைச் சேர்ந்த, மகிழவெட்டுவான் வித்தியாலயத்தில் தரம் -09 இல் கல்வி கற்கும் சிவலிங்கம் திஷாந்தினி (வயது 16) என்ற பாடசாலை மாணவியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக  தெரிவித்தனர்.

மேற்படி சடலம், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X