Suganthini Ratnam / 2015 நவம்பர் 02 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
நிறுத்தல் அளவைக் கருவிகளை பரிசோதித்து அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கை காத்தான்குடிப் பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகஸ்தர் ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2016ஆம் ஆண்டு நவம்பர் வரைக் காலப்பகுதிக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்கே இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது ஒரு மாதம்வரை நடைபெறும்.
நிறுத்தல் அளவைக் கருவிகளை பயன்படுத்துவோர் இதற்கான அனுமதிப்பத்திரங்களை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அவர் கூறினார்.

21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025