Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
எம்.எம்.அஹமட் அனாம் / 2017 செப்டெம்பர் 26 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
“ஓட்டமாவடி பிரதேச சபையின் ஊழல்கள் மிக விரைவில் வெளியிடப்படும்” என, கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோரின் இணைத் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (25) நடைபெற்ற போது, அவர் இதைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளரின் நடவடிக்கை சம்பந்தமாக அநேகமான முறைப்பாடுகள் எமக்குக் கிடைக்கப்பட்டுள்ளன. ஓட்டமாவடி மீன் சந்தையில் அவசரமாக அமைக்கப்பட்டுள்ள கடைகளில் அனைவருக்கும் சந்தேகம் காணப்படுகின்றது.
“கையூட்டல்கள் மூலம் கடைகள் வழங்கப்பட்டுள்ளதாக, ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில், மக்களால் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அத்தோடு, பெருந்தொகைப் பணத்தைக் கொண்டு, பிரதேச சபை கடனாக பெற்று, இப்பிரதேசத்துக்குப் பொருத்தமில்லாத மண் அகழ்வு இயந்திரம் ஒன்றை, முறைகேடான முறையில் பிரதேச சபை செயலாளரின் தன்னிச்சையின் பெயரில் செயற்பட்டு இருப்பதை சபை வன்மையாகக் கண்டிக்கின்றது.
“அதுமாத்திரமில்லாமல் இங்கு முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்செயல்கள் தொடர்பில், பொருத்தமான விசாரணையை மேற்கொள்ள ஓட்டமாவடி பிரதேச செயலாளர், உதவித் திட்டப் பணிப்பாளர், கணக்காளர், கோறளைப்பற்று மத்திய பிரதே செயலாளர் அடங்களாக ஒரு விசாரணை குழுவை இப்போது நியமிக்கின்றோம்.
“இந்த விசாரணை குழு, 2 வாரங்களுக்குள் பரிபூரணமாக விசாரணைகளை மேற்கொண்டு, அதனுடைய அடைவுகளை இணைத் தலைமைகளுக்கு தெரியப்படுத்துவதோடு, இதில் இடம்பெற்றுள்ள ஊழல்கள் விடயம் சம்பந்தமாக மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், கிழக்கு மாகாண ஆளுநர், புலனாய்வுப் பிரிவு, நாடாளுமன்ற கோப்புக்கும் பாரப்படுத்தும் படி இணைத் தலைமைகள் கேட்டுக்கொள்கின்றன.
“அத்தோடு விசாரணைக்கு நியமிக்கப்பட்ட குழுக்கள் பிரதேச சபையின் ஆவணங்களை பார்வையிடுவதற்கு அதிகாரம் வழங்குமாறு, மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பி வைக்க வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago