Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான், வா.கிருஸ்ணா
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ‘பிள்ளையான்’ என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திகாந்தனை, மார்ச் மாதம் 17ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லா உத்தரவிட்டார்.
அவரது வழக்கு, இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மேற்படி விளக்கமறியல் நீடிப்பு உத்தரவை, நீதிபதி பிறப்பித்தார்.
2005.12.25 திகதியன்று, மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக, பிள்ளையான் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago