2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டின் கைதானவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஏழு வயதுச் சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 18 வயதுடைய சந்தேக நபரை எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் எம்.ஐ.றிஸ்வி, செவ்வாய்க்கிழமை (16) உத்தரவிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்த இச்சிறுவனை வழிமறித்து காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபரை செவ்வாய்க்கிழமை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X