Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் மணல் அகழ்வை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்கள், அமைச்சரை சந்தித்து புகார் தெரிவித்ததை அடுத்து பிரதி அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அகழப்படும் மணலானது வெளிமாவட்டங்களில் அதிக தொகைக்கு விற்கப்படுவதனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல் தேவை உடையோருக்கு அதைப் பெற்றுக்கொள்வதில் சிரமத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அத்தோடு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் மண் அகழ்விற்கு அரச அதிகாரிகள் மற்றும் பூகோல விஞ்ஞான திணைக்களத்தின் உத்தியோகத்தவர்கள் உதவி செய்வதாகவும் அவர்கள் பிரதி அமைச்சரிடம் முறையிட்டனர்.
மோசடியற்ற நேர்மையான கேள்விப்பத்திரத்துக்கூடாகவே மணல் வழங்குவதற்கான உரிமம் வழங்கப்பட வேண்டும், சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வை தடுக்கும் வகையில் அதிகாரிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், பொதுமக்களின் நியாயமான இந்த கோரிக்கையை கருத்தில் கொண்டு பிரதேசத்தில் மண் அகழ்வை மேற்கொள்பவர்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றும் பிரதியமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago