எம்.எம்.அஹமட் அனாம் / 2018 மே 09 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு வெவ்வேறு இடங்களில், சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரங்கள் இரண்டின் சாரதிகள் இருவர், நேற்று (08) மாலை கைதுசெய்யப்பட்டனர் என, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன தெரிவித்தார்.
வாகனேரி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றி வந்த ஒருவர், காவத்தமுனை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டார் என்பதுடன், கிரான் புலிபாய்ந்தகல் பகுதியில் இவ்வாறு மண் ஏற்றி வந்த ஒருவர், கிரான் பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டார்.
அத்துடன், மேற்படி உழவு இயந்திரங்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும், பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
5 minute ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
21 Dec 2025