2025 மே 01, வியாழக்கிழமை

மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 12 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு, கருவப்பங்கேணி பகுதியில், மட்டக்களப்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கருவப்பங்கேணி, அம்ரோஸ் வீதியிலுள்ள வீடொன்றை சோதனை செய்த போது, விற்பனைக்காக கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த “கால்போத்தல்” மதுபான போத்தல்கள் 112 கைப்பற்றப்பட்டன என மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .