Editorial / 2020 மே 22 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்
வாழைச்சேனை வட்டார வன திணைக்களத்துக்குச் சொந்தமான குடும்பிமலை காட்டுப்பகுதியில், மரக்கூட்டுத்தாபன அனுமதிப்பத்திரத்தைச் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி, மரக்குற்றிகள் கடத்திலில் ஈடுபட்ட ஐவர், நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளனரென, வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.
6 அடி நீளமுடைய 41 தேக்கு மரக்குற்றிகளும், 07 முதுரை மரக்குற்றிகளும், வகுப்பு ஒன்றை சேர்ந்த 40 தேக்கு மரக்குற்றிகளும், வகுப்பு இரண்டைச் சேர்ந்த 100 தேக்கு மரக்குற்றிகளும் லொறி, மோட்டார் சைக்கிள், மரம் வெட்டும் இயந்திர வாள், 4 அலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரும் வாழைச்சேனை / மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மரம் ஏற்றுவதற்கு பயன்படுத்திய லொறி இதற்கு முன்னரும் இரு தடவை சட்டவிரோத மரக்குற்றிகள் ஏற்றப்பட்டு, நீதிமன்றத்தினுடாக விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
26 Mar 2026
26 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
26 Mar 2026
26 Mar 2026