Freelancer / 2023 ஏப்ரல் 11 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
புதிய காத்தான்குடி பிரதேசத்தில் 10 ம் ஆண்டு கல்வி பயிலும் 15 வயது மாணவி வீட்டில் படித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போயிருப்பாதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் நிலைய குற்றத்ததடுப்புப் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ஏ .எஸ்.றஹீம் தெரிவித்தார்.
குறித்த மாணவியின் தந்தை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் தாய் வீட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். வீட்டின் அறையொன்றினுள் குறித்த சிறுமி படித்துக் கொண்டிருந்துள்ளார்.
தாய் வந்து பார்த்தபோது மகளைக் காணவில்லை எனவும் வெளியில் ஓட்டோ ஒன்று சென்ற அடையாளம் தெரிந்ததாகவும் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த மாணவியை தேடும் பணிகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago