2025 ஜூன் 19, வியாழக்கிழமை

முதலைக்கு இரையாகிய மூதாட்டியின் கால்வாசி சடலம் மீட்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவு புணாணை, மயிலந்தன்னை – விசரோடை ஆற்றிலிருந்து முதலை கடித்த நிலையில் மூதாட்டி ஒருவரின் சடலத்தை மீட்டதாக, வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மயிலந்தன்னை கிராமத்தைச் சேர்ந்த பொன்னன் மாரியாயி (வயது 71) என்பவரின் சடலமே, இன்று (23) மீட்கப்பட்டுள்ளது.

குறித்த ஆற்றுக்கு, நேற்று (22) சென்ற குறித்த மூதாட்டி, மாலை வரையும் வீட்டுக்கு வராமையால், உறவினர்களால், வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையையடுத்தே, குறித்த மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மூதாட்டியில் உடலில், முக்கால்வாசிப் பங்கை முதலை உட்கொண்டிருந்தது என்றும் அவரின் வலது காலும் பிண்புறமும் மாத்திரமே, அடையாளம் காணக்கூடிய வகையில் இருந்தது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

உடற்கூறாய்வுக்காக, சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .