Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 டிசெம்பர் 04 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு, வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்துக்கு முரணான வகையில் முறைகேடான நியமனங்களை வழங்கியுள்ளதாகவும் இதற்கு நியாயம் பெற்றுத் தருமாறும் கோரி, போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தும் புறக்கணிக்கப்பட்ட பட்டதாரிகள் 1,749 பட்டதாரிகள் சார்பாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அஸீஸ். தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் விவரம் தெரிவிக்கையில்,
“சமீபத்தில் கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்குவது சம்பந்தமான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்துள்ள அதேவளை, நியமனம் வழங்கப்படாது தாம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகக் கூறும் பட்டதாரிகள் 1,749 பேர் சார்பாக முறைப்பாடொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
“புறக்கணிக்கப்பட்டிருப்பதாகக் கூறும் பட்டதாரிகளின் முறைப்பாடு குறித்து நாம் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் விளக்கம் கோரியிருக்கின்றோம்.
“பட்டதாரிகளால் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஏற்கெனவே அரச சேவையிலுள்ளவர்கள் புதிய ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கப்பட மாட்டார்கள் என கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தும் அந்த சுற்று நிரூபத்துக்கு முரணான வகையில் ஏற்கெனவே அரச சேவையிலுள்ளவர்கள் புதிய ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள்.
“அத்துடன், சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டிருக்காத புதிய விடயமாக கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஆசிரியர் தேர்வுக்காக வெவ்வேறான வெட்டுப் புள்ளிகளும், அதேவேளை ஒவ்வொரு பாடத்துக்குமாக வெவ்வேறு வெட்டுப் புள்ளிகளும் என்ற அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
“மேலும், ஆளணி வெற்றிடங்கள் வெளிப்படையதாகத் தெரிவிக்கப்படாது மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
“இதேவேளை, விடயதானத்துக்குப் பொருத்தமில்லாத ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். உதாரணமாக பொருளியல் துறை விசேட பட்டதாரிக்கு தமிழ் இலக்கிய பாடவிதானம் வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு பொருத்தமில்லாத பாடவிதானங்களுடனும் குளறுபடியான விதத்திலும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
“எனவே, இவற்றையெல்லாம் சீர் செய்து, நியமனம் வழங்காது அநீதி இழைக்கப்பட்ட 1,749 பட்டதாரிகளுக்கும் நியாயம் பெற்றுத்தருமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
45 minute ago
49 minute ago
3 hours ago