வா.கிருஸ்ணா / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்டதேற்றாத்தீவில், ஓடிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று, திடீரெனத் தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ள சம்பவம், நேற்று (15) இடம்பெற்றுள்ளது.
தேற்றாத்தீவில் நடைபெற்ற புத்தாண்டு விளையாட்டு விழாவின்போது, மரதன் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்டவருக்கு ஆதரவு வழங்கி, தேற்றாத்தீவு பிரதான வீதி வழியாகச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.
எரிபொருள் கசிவே தீப்பற்றலுக்கு காரணமாகுமென்று, குறித்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த மோட்டார் சைக்கிள் பகுதியளவில் தீ விபத்தில் கருகியதுடன், ஓட்டுநர், சிறு தீக்காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். தீயை அயலவர்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர்.
இது தொடர்பில் களுவாஞ்சிகுடிப் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதுடன், இது தொடர்பான விசாரணைகளை, களுவாஞ்சிகுடிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
8 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Dec 2025