Niroshini / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு, வந்தாறுமூலை நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாடு செய்த இரத்த தான முகாம் நேற்று சனிக்கிழமை வந்தாறுமூலை அம்பலத்தடி வாசிகசாலை கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.
இதில், மட்டக்களப்பு போதன வைத்தியசாலை இரத்த வங்கி வைத்தியர் டபிள்யூ.எச்.எல்.ஜ.கருணாசேன, தாதியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது 63 நன்கொடையாளர்கள் தங்களின் இரத்தத்தை தனம் செய்திருந்தனர்.
ஈஸ்டன் சலேஞ்சஸ் விளையாட்டு கழகம் மற்றும் விஸ்ணு பக்தர்கள் இணைந்து இந்த இரத்த தான நிகழ்வை வருடாந்தம் ஒழுங்குபடுத்தி நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025