2025 ஜூன் 07, சனிக்கிழமை

வாழைச்சேனை மீனவர்களால் தாக்குதல்: புல்மோட்டையில் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2025 ஜூன் 05 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கீதபொன்கலன்

திருகோணமலை, திருக்கடலூர் மீனவர் வாழைச்சேனை மீனவர்களால் தாக்கப்பட்டதை கண்டித்தும்,தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்தும் திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதியை மறித்து மீனவர்கள், வியாழக்கிழமை (05) காலை 8 மணி முதல் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தை அடுத்து திருகோணமலை பொலிஸார் விரைந்து செயல்பட்டு தாக்குதலில் ஈடுபட்ட படகு மற்றும் அதன் உரிமையாளரை வாழைச்சேனையில் வைத்து கைது செய்தனர்.இதனை அடுத்து 11.30 மணிக்கு போராட்டம் நிறைவடைந்தது.

திரு கடலூரில் இருந்து 6 மீனவர்கள் இரண்டு வெளியிணைப்பு படகுகளில் இலங்கைத்துறை கடற்பகுதிக்கு வழமை போன்று தொழிலுக்காக செவ்வாய்க்கிழமை (03)  சென்றனர்.

அப்போது அங்கு வந்த வாழைச்சேனையை சேர்ந்த மீனவர்களின் பாரிய விசைப்படகு இந்த சிறிய படகுகளில் ஒன்றின் மீது வேண்டுமென்றே மோதியுள்ளது.இதனால் படகு சேதமடைந்து கவிழ்ந்துள்ளது.அதில் இருந்த மீனவர் கடலில் விழுந்துள்ளனர்.அப்போது விசைப்படகில் வந்தவர்கள் பாதிக்கப்பட்ட மீனவர்களை வாள்,பொல்லுகள் கொண்டு தாக்கியுள்ளனர்.

உயிராபத்தான நிலையில் இருந்த மீனவர் உதவி கோரி சத்தம் எழுப்பியபோது இன்னு மொரு விசைப்படகில் வந்தவர்கள் இவர்களை காப்பாற்றி திருகோணமலைக்கு புதன்கிழமை (04) பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளனர்.

இத்தாக்குதலில் காயமடைந்த மீனவர் ஒருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையின் விசேட சிகிச்சை பிரிவில் புதன்கிழமை (05) அனுமதிக்கப்பட்டார்.

படகு கவிழ்ந்தமையினால் மொத்தமாக  21 லட்சம்  ரூபாய் பெறுமதியான வெளியிணைப்பு இயந்திரம்,வலைகள் உற்பட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் படகு என்பன பாரிய சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .