Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வா.கிருஸ்ணா / 2018 மே 23 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நன்கு சிந்திக்கக்கூடிய, அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டக்கூடிய நல்ல இளைஞர்கள் உருவாக வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
திகுவி கல்வி சேவை நிலையம் ஊடாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் தாதியப் பயிற்சியைப் பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பில் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நேற்று (22) மாலை நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “அநேகமான இளைஞர்கள், இன்று சமூக வலைத்தளங்களில் தமது காலத்தைச் செலவிடுகின்றனர். மனிதன் மனிதனோடு பேசும் நிலமை மாறி, மனிதன் இயந்திரங்களோடு பேசி, இயந்திரங்களாகவே மாறும் நிலை உருவாகிவருகின்றது. இந்த நிலமை மாற்றப்படவேண்டும்.
“முற்போக்குச் சிந்தனையுடைய தலைவர்கள் உருவாகவேண்டும். தனது இனத்தையும் மக்களையும் சிந்திக்கின்ற ஒவ்வோர் இளைஞனும் கிழக்கின் அடுத்த தலைவர்கள்” என்றார்.
7 minute ago
12 minute ago
14 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
14 minute ago
22 minute ago