2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வாகனங்களால் மாணவர்களுக்கு சிரமம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி, பகுதியிலுள்ள சில வீதிகளில், கிழமை நாட்களில் காலை வேளையில் கல், மண் ஏற்றிய கனரக வாகனங்கள் செல்வதால், பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் பாதசாரிகளும் , அசௌகரியங்களுக்கு உள்ளாகுகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
காலை 6.45 மணி தொடக்கம் 8 மணிவரையான காலப்பகுதியில், மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் நேரத்திலேயே, இந்த வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன எனத் தெரிவிக்கும் மக்கள், இதனால், மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதற்கு, தாமதமாகுவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே இது தொடர்பில், காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் கவனம் செலுத்தவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X