2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் இளைஞர்கள் இருவர் காயம்

Editorial   / 2018 மே 18 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு - மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு முன்பாக, இன்று வெள்ளிக்கிழமை பகல் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்கள் இருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு வைத்தியசாலையில், நோயாளியை அனுமதித்துவிட்டு மாவடிவேம்பு வைத்தியசாலை நோக்கி வந்த அம்பியுலன்ஸ் வண்டியும் மருதமுனையிலிருந்து ஓட்டமாவடி நோக்கிப் பயணித்த மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டதில் இவ்விபத்துச் சம்பவத்துள்ளது.

விபத்தில் மருதமுனையைச் சேர்ந்த எம்.சாஹிர் (வயது 27) மற்றும் ஏ.எம்.ஆசிக் (வயது 24) ஆகிய இருவருமே காயமடைந்துள்ளனர்.

மேற்படி இருவரும், மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .