Editorial / 2020 மார்ச் 19 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
விபத்தில் படுகாயமடைந்த நபரொருவர், கொரோனா வைரஸ் தொற்றிவிடும் என்ற அச்சம் காரணமாக, தன்னை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டாமெனக் கூக்குரலிட்ட சம்பவமொன்று, ஏறாவூரில் நேற்று (18) இடம்பெற்றுள்ளது.
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பிரதான வீதியில், சைக்கிளில் சென்ற மேற்படி நபர் மீது, வாழைச்சேனை பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ஓட்டோவொன்று மோதியதில், அந்நபர் படுகாயமடைந்தார்.
விபத்தில் படுகாயமடைந்த நபர், வைத்தியசாலைக்குச் சென்றால் கொரோனா வைரஸ் தொற்றும் என்ற அச்சம் காரணமாக தன்னை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல வேண்டாமென்று கூக்குரல் இட்டாரென, உதவிக்கு விரைந்தோர் தெரிவித்தனர்.
எனினும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மேற்படி நபர், சிகிச்சை பெற்று வருவதோடு, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago