2025 மே 09, வெள்ளிக்கிழமை

வெள்ளம் காரணமாக மட்டக்களப்பில் 3 பாடசாலைகள் மூடப்பட்டன

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 07 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் ஏறாவூர்க் கோட்டத்திலுள்ள மூன்று பாடசாலைகள் இன்று வியாழக்கிழமை முதல் மூடப்பட்டுள்ளதாக கோட்டக் கல்வி அதிகாரி ஐ.எல்.மஹறூப் தெரிவித்தார்.

ஏறாவூர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயம், ஐயங்கேணி அப்துல் காதர் வித்தியாலயம் மற்றும் ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே மூடப்பட்டுள்ளன.

இப்பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால்  மாணவர்கள் சமுகமளிக்கவில்லை. கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாக அப்பாடசாலை அதிபர்கள் அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, இன்று வியாழக்கிழமையும் நாளை வெள்ளிக்கிழமையும் பாடசாலைகளை மூடிவிட்டு அடுத்து வரும் சனிக்கிழமைகளில் பதில் பாடசாலைகளை நடத்துமாறு அதிபர்களுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X