2025 மே 06, செவ்வாய்க்கிழமை

விவசாய அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத்தையும் அதனுடன் தொடர்புடைய செயற்றிட்டங்களையும் அபிவிருத்தி செய்வது தொடர்பான  கலந்துரையாடல், நேற்று (13) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் அதனுடன் தொடர்புபட்ட நீர்ப்பாசனத்துறை, மீன்பிடித்துறை, மண் அகழ்வு, வனவளங்கள், பாலங்கள் அமைத்தல், தென்னை, பனை வளர்ப்பு, கால்நடைகளுக்கான மேய்ச்சல்;தரை போன்றவை தொடர்பிலும்; பற்றி ஆராயப்பட்டன.

இதில் கிழக்கு மாகாண விவசாய் அமைச்சர் கி.துரைராசசிங்கம்,  மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ், அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன், கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எம்.எம்.ஹுசைன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X