2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'தீயவழியில் அரசியல் நடத்தினால் அது அவர்களை அழிக்கும்'

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 18 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

வன்முறைகளில் அல்லது தீய வழிகளில் அரசியலை நடாத்த நினைத்தால் அதே அவர்களை அழித்துவிடும். நாம் நடாத்திய 60 வருடகால அரசியல் அனுபவத்தைக் கொண்டு தற்போது அரசியல் செய்ய வேண்டியுள்ள காலமாகவுள்ளது. எனவே தற்;போது உணர்ச்சி வசப்படுவதோ, ஆயுதம் ஏந்திப் போராடுவதோ உகந்ததல்ல. சாத்வீனமான முறையில் மூளையை நன்கு பாவித்து செயற்பட வேண்டும் என கிழக்கு மகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச 100 கால்நடை பண்ணையாளர்களுக்கு உலக தரிசன நிறுவனத்தின் உதவியுடன் இலவசமாக பால் கொள்கலன்களை வழங்கி வைக்கும் நிகழ்வு தும்பங்கேணி அமுதசுரபி பால் பதனிடும் நிலையத்தில் வியாழக்கிழமை (17) மாலை கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் தெ.சிவபாதம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து  தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் 'போர் ஒன்று தவிர்க்க முடியாமல் நடைபெறுமாயின் சர்வதேச அமைப்புக்களின் கண்காணிப்பிலே அப்போர் நடைபெற வேண்டும். ஆனால் நம் நாட்டிலே சர்வதேச அமைப்புக்கள் அனைத்தையும் வெளியேற்றிவிட்டுத்தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நந்திக்கடலிலே எமது மக்களைக் கொன்று தள்ளினார். எனவே சர்வதேச நிறுவனங்களின் முக்கியத்துவத்தை தமிழ் மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள்.

எமது எல்லைக் காவலர்கள் கால்நடைப் பண்ணையார்கள்தான் எல்லையில் அணைபோன்று பாதுகாப்பளித்த வண்ணம் எமது கால்நடைப் பண்ணையாளர்கள் உள்ளார்கள். அவர்கள் இல்லையென்றால் எமது பகுதிக்குள் பல ஊடுருவல்கள் நடைபெற்றிருக்கும். சின்னமாதவனை, பெரியமாதவனை, நெளிகள் ஆகிய எல்லைப் பகுதிகளில் அத்துமீறிய பயிர்செய்கையாளர்களின் வரவு தற்போது எமது செயற்பாடுகளால் குறைக்கப்பட்டுள்ளன.

தற்போது காணப்படுகின்ற இந்நிலைமையை நாம் எவ்வாறு தொடரச் செய்வது என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும், எமது பிள்ளைகள் பலரை இழந்து விட்டோம். கோடான கோடி சொத்துக்களை எல்லா இழந்து விட்டோம். எனவே அரசியல் பிரச்சினையில்; தீர்வைக் கண்டால்தான் எமது பிள்ளைகள் இனிமேல் சமாதானமாக வாழ முடியும். மிகவும் நிதானமாகவும் பக்குவமாகவும் எமது அரசியலை நகர்த்த வேண்டும் என எமது தலைமை சொல்கின்றது. இப்போது அறிவால் செய்கின்ற அரசியல் உணர்வால் செய்கின்ற அரசியல் அல்ல. பலர் எம்மை உசுப்பேற்றப் பார்க்கின்றார்கள்.

வன்முறைகளில் அல்லது தீய வழிகளில் அரசியலை நடாத்த நினைத்தால் அதே அவர்களை அழித்துவிடும். நாம் நடாத்திய 60 வருடகால அரசியல் அனுபவத்தைக் கொண்டு தற்போது அரசியல் செய்ய வேண்டியுள்ள காலமாகவுள்ளது. எனவே தப்போது உணர்ச்சிவசப்படுவதோ, ஆயுதம் ஏந்திப் போராவிடுவதோ உகந்ததல்ல. சாத்வீனமான முறையில் மூளையை நன்கு பாவித்து செயற்பட வேண்டும்.

முன்னர் எமக்கு அதிகாரம் இல்லை அவ்வேளையில் பிரச்சனைகளை அடையாளப்படுத்துவது மாத்திரமாகத்தான் எமது வேலையாக இருந்தது. தற்போது அதிகாரத்திற்குப் பக்கத்தில் நிற்கின்றோம். ஆனால் தற்போது நாம் பிரச்சனைகளுக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டியவர்களாகவுள்ளோம்' என்றார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X