Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 மார்ச் 07 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் மற்றும் ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் உட்பட 4 பேரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நாளை (8) ஆஜராகுமாறு கூறி நீதிமன்றத்தால் திங்கட்கிழமை (6) அழைப்பாணை அனுப்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் திகதி மேற்படி வேலையற்ற பட்டதாரிகள்; நடத்திய கவனயீர்ப்புப் பேரணியின்போது, மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக நின்ற பொலிஸார் மற்றும் மாவட்டச் செயலக அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்யவிடாது இடையூறு விளைவித்தார்கள் எனவும் சுமூகமான நிலைமையைக் குழப்பும் வகையில் இவர்கள் நடந்துகொண்டார்கள் எனவும் கூறி மேற்படி 4 பேருக்கும் எதிராக நீதிமன்றத்தில் மட்டக்களப்புப் பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரகுமாறு கூறி அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் ரி.கிசாந் தெரிவித்தார்.
25 minute ago
27 minute ago
31 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
27 minute ago
31 minute ago
34 minute ago