2026 மே 01, வெள்ளிக்கிழமை

மட்டு. பொது நூலக நிர்மாண பணிகளுக்கு கிழக்கு முதல்வர் 40 மில்லியம் ரூபா ஒதுக்கீடு

Super User   / 2012 ஜூன் 01 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டு வரும் பாரிய பொது நூலகத்தின் கட்டிட நிர்மாண பணிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது விசேட அபிவிருத்தி நிதி மூலம் 40 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளார்.

மட்டக்களப்பின் ஆச்சரியமாக சுமார் 250 மில்லியன் ரூபா செலவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் முழு முயற்சியின் கீழ் இந்த பொது நூலகம் அமைக்கப்பட்டு வருகின்றது.

இதற்காக இதுவரையில் 150 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அடுத்த வருடம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் இந்த பொது நூலகமானது சகல வசதிகளுடனும் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .