2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வெள்ளத்தினால் மட்டு. மாவட்டத்தில் 142,674 பேர் பாதிப்பு

Super User   / 2013 ஜனவரி 08 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களாக பெய்த அடை மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 38,177 குடும்பங்களை சேர்ந்த 142,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக செயலாளர் கே.விமலநாதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும்  இந்த குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று மட்டக்களப்ப மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக 6,098 குடும்பங்களை சேர்ந்த 19,868 பேர் இடம்பெயர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X