2026 மே 06, புதன்கிழமை

ஏறாவூர் பிரதேசத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி காணி கச்சேரி

Super User   / 2012 மார்ச் 22 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிழக்கு மாகாண கல்வி மற்றும் காணி அமைச்சின் ஏற்பாட்டில் எதிர்வரும் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு ஏறாவூர் பிரதேசத்தில் காணி கச்சேரி இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

ஏறாவூர் அலிகார் மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ள இந்த காணி கச்சேரியில் கிழக்கு மாகாண கல்வி மற்றும் காணி அமைச்சர் விமலவீர திசாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனது வேண்டுகோளிற்கிணங்க இடம்பெறும் இந்த காணி கச்சேரியில், யுத்ததினால் காணிகளை இழந்த மக்களின் பிரச்சினை தீர்வு காணப்படும் என அமைச்சர் சுபைர் தெரிவித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் காணப்படும் பிரச்சினைகளை ஆராயும் விசேட கூட்டம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.அமீர் அலியின் வேண்டுகோளிற்கிணங்க தன்னால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விசேட கூட்டத்தில் கிழக்கு மாகாண கல்வி மற்றும் காணி அமைச்சர் விமலவீர திசாநாயக்க, முன்னாள் அமைச்சர் எஸ்.அமீர் அலி, மாகாண கல்வி மற்றும் காணி அமைச்சின் செயலாளர் என்.புஷ்பகுமார, மாகாண கல்வி பணிப்பாளர் ஈ.போல், வலய கல்வி பணிப்பாளர் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளதாக அமைச்சர் சுபைர் மேலும்  தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .