2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

சுகாதாரமும் ஆரோக்கியமும் தொடர்பான கண்காட்சி 14ஆம் 15ஆம் திகதிகளில்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 11 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்தின் சின்னவத்தை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் சுகாதாரமும் ஆரோக்கியமும் தொடர்பான விழிப்புணர்வுக் கண்காட்சி எதிர்வரும் 14ஆம் 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையினால் நடத்தப்படவுள்ள இக்கண்காட்சிக்கு ஐரோப்பிய ஒன்றியமும் ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கமும் ஒத்துழைப்பு வழங்கவுள்ளன.

மாதிரிப்பண்ணை அமைத்தல், வீட்டுத்தோட்டம் அமைத்தல், நடமாடும் வைத்திய முகாம், போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின்;; நடமாடும் சேவை, இரத்ததானம் ஆகியன தொடர்பான விழிப்புணர்வையும் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் கண்காட்சி நடைபெறவுள்ளதாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளை தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .