2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

களுவன்கேணியில் 23 வீடுகள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 11 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று  பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள களுவன்கேணி கிராமத்தில் சுவீடன் கூட்டுறவு நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட 23 நிரந்தர வீடுகள் பயனாளிகளிடம்  வியாழக்கிழமை (11) கையளிக்கப்பட்டன.

போரினால் பாதிக்கப்பட்ட நிலையில் இலகுவில் பாதிப்படையக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட குடும்பங்களுக்காக  இந்த வீடமைப்புத்திட்டம் உருவாக்கப்பட்டதாக சுவீடன் கூட்டுறவு நிலையத்தின்  கிழக்கு மாகாண இணைப்பாளர் ரீ.மயூரன் தெரிவித்தார்.

இந்த வருடம் ஏப்ரல் மாதம் ஆம்பிக்கப்பட்ட இந்த வீட்டுத்திட்டம், 6  மாத காலப்பகுதியினுள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.  ஒவ்வொரு வீடும் தலா  7 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

இந்த நிகழ்வில் சுவீடன் கூட்டுறவு நிலையத்தின்  இலங்கைக்கான பணிப்பாளர் சுபாஸி திஸ்ஸநாயக்க, அந்த நிறுவனத்தின் ஆசிய நாடுகளுக்கான பிராந்திய பணிப்பாளர் மக்னஸ் பேர்ஸன் (சுநபழையெட னுசைநஉவழச கழச யுளயை – ஆயபரௌ Pநசளளழn), சுவீடன் கூட்டுறவு நிலையத்தின்  கிழக்கு மாகாண இணைப்பாளர் ரீ.மயூரன் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர்,  பயனாளிகள்;  கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X