2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

20 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


 -ஏ.எச்.ஏ. ஹுஸைன்


ஸ்ரீலங்கா முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால்  நீடித்து நிலைக்கும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மற்றும் செயற்கை இடர்களினால் இலகுவில் பாதிக்கப்படக் கூடிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு வெள்ளிக்கிழமை (29) ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மீராகேணிக் கிராமத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் எயிட் நிறுவன மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எஸ்.எம். அஸ்மி தலைமையில் இடம்பெற்றது.

இயற்கை மற்றும் செயற்கை இடர்களினால் இலகுவில் பாதிக்கப்படக் கூடிய வறுமை நிலையிலுள்ள 20 தமிழ் முஸ்லிம் குடும்பங்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான விவசாயத்துக்குத் தேவையான உபகரணங்கள், பயிர் விதைகள் மற்றும் மரக் கன்றுகள் என்பன வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, ஸ்ரீலங்கா முஸ்லிம் எயிட் நிறுவன சிரேஷ;ட நிகழ்ச்சித் திட்ட அதிகாரி பஸ்லான் தாஸிம், உணவுப் பாதுகாப்புத் திட்ட அலுவலர் எம்.எஸ்.ஏ. டில்சாத், நிருவாக உதவியாளர் எம்.ஏ.எம். இர்ஷத், விவசாயத் திணைக்கள பாடவிதான உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். சலீம், விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷாதா ஷாரீன், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.ஏ. காதர், மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X