2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஓட்டமாவடிக்கு விஜயம்

Super User   / 2011 மே 09 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஸரீபா)

ஓட்டமாவடியில் இன்று நடைபெற்ற கவனஈர்ப்பு நடவடிக்கையை தொடர்ந்து இன்று மாலை பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் ஆகியோர் ஓட்டமாவடிக்கு விஜயம் செய்தனர்.

இதன்போது கல்குடா பள்ளிவாயல்கள் முஸ்லீம் நிறுவனங்களின் சம்மேளனம் மினுமினுத்தவெளி விவசாயக் கண்ட அமானா விவசாய அமைப்பு மற்றும் கல்குடாத் தொகுதி சுதந்திர விவசாய சம்மேளனம் ஆகியவற்றின் பிரதிநிதிகளை  சந்தித்து கலந்துரையாடினார்.

நாளை செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட  செயலகத்தில் இடம்பெறவுள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இக் காணிப் பிரச்சனை தொடர்பாக முன்வைத்து நிரந்தரத் தீர்வை பெற்றுத் தருவதாக அவர்  உறுதியளித்தார்.

இவர்களிடம் ஜனாதிபதிக்கு அனுப்பிய மகஜரின் பிரதி வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .