2026 மே 14, வியாழக்கிழமை

காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரிப்பு

Kogilavani   / 2012 பெப்ரவரி 05 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில்  குரங்குகளின் அட்டகாசம்  அதிகரித்துள்ளதால் இப்பிரதேச மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

வீடுகளின் கூரைகளில் குரங்குகள்; பாய்ந்து திரிவதால் கூரைகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் மழைகாலங்களில் கூரைகள் ஒழுகுவதாகவும் மக்கள் கவலை   தெரிவிக்கின்றனர்.

குரங்குகள் பாய்ந்து சிலரை காயப்படுத்திய சம்பவங்களும் குறித்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை பிரதான வீதியில் செல்லும் வாகனங்களுக்கு மேல் குரங்குகள் அமர்ந்து செல்வதைதயும் காணமுடிகின்றது.  குறித்த குரங்குகளின் அட்டகாசத்தை கட்டுபடுத்துமாறு பொலிஸார் மற்றும் நகர சபை நிர்வாகத்தை பொதுமக்கள் கோருகின்றனர்.



 


  Comments - 0

  • human Monday, 06 February 2012 12:10 PM

    குரங்கில் இருந்து வந்த மனிதா , அதுகும் அக்கம் பக்கத்தில் வாழ்ந்துவிட்டு போகட்டும் . ஒன்றும் செய்துவிடாதே .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .