2026 மே 14, வியாழக்கிழமை

dd

காத்தான்குடியில் மூக்கு கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 பெப்ரவரி 06 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வறுமையான குடும்பங்களை சேர்ந்த பார்வை குறைந்தவர்களுகு  மூக்கு கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் காத்தான்குடி அலுவலகத்தில் நடைபெற்றது.
 
பெண்களுக்கான வலுவூட்டலுக்;கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் ஜம் இய்யத்துஸ்ஸபாப் நிறுவனத்தின் அணுசரணையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
 
அமைப்பின் தலைவியும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சா தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் மற்றும் ஜம் இய்யத்துஸ் ஸபாப் பிரதி நிதி மௌலவி எம்.தாஸீம் உட்பட முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
 
இதன்போது 160 பேருக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .